2014-04-22 16:57:38

இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த கிறிஸ்தவ இளைஞர் ஒருவர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை


ஏப்.22,2014. இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்ததற்காக 22 வயது பாகிஸ்தான் கிறிஸ்தவ இளைஞர் ஒருவர் அந்நாட்டு இஸ்லாமிய தீவிரவாதி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
லாகூரில் உள்ள இஸ்லாமிய மையம் ஒன்றில் துப்புரவுப் பணியாளராக வேலைச் செய்துவந்த Haroon என்ற கிறிஸ்தவ இளைஞர், அம்மையத்தின் Umer Farooq என்ற பாதுகாப்புப் பணியாளரால் மதம் மாறக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.
அதிகப் பணம் தருவதாக ஆசைக் காட்டியும் இந்தக் கிறிஸ்தவ இளைஞர் இஸ்லாமிற்கு மாற மறுத்ததால், பாதுகாப்பு பணியாளரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
இத்தகையச் செயல்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசு தவறி வருவதாலும், இஸ்லாமியத் தலைவர்களின் ஆதரவு குற்றவாளிகளுக்கு இருப்பதாலும் இத்தகையத் தாக்குதலகள் தொடர்வதாக இங்கிலாந்தைச் சேர்ந்த சட்ட உதவி மையம் கவலை தெரிவிக்கிறது.

ஆதாரம் : Christian headlines








All the contents on this site are copyrighted ©.