2014-04-21 14:53:42

நேபாள கிறிஸ்தவர்களுடன் இணைந்து இந்து மற்றும் புத்த மதத்தினரும் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடியுள்ளனர்


ஏப்.21,2014. நேபாளத்தில் கிறிஸ்தவர்களுடன் இணைந்து, இந்து மற்றும் புத்த மதத்தினர் இவ்வாண்டு உயிர்ப்புப் பெருவிழாவை, சிறப்பான விதத்தில் கொண்டாடியுள்ளனர்.
உயிர்ப்புநாளில் இயேசு கொணர்ந்த செய்தி அனைத்து மதத்தினருக்கும் பொருத்தமுடையதாகவும் நம்பிக்கையைத் தருவதாகவும் உள்ளது என உரைத்த காத்மண்ட் பேராலய அருள் பணியாளர் Richard Rai அவர்கள், விரைவில், இத்திருநாள், நேபாளத்தின் அனைத்து மதங்களுக்கும் சமூகங்களும் இணைந்து கொண்டாடும் திருவிழாவாக மாறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
நேபாளத்தில், இந்த உயிர்ப்புப் பெருவிழா நாளின்போது, பிறமதத்தினரும் தங்களுக்கிடையே வாழ்த்து அட்டைகளையும் செய்திகளையும் பரிமாறிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.