2014-04-14 16:42:36

திருத்தந்தையின் Twitter செய்தி: "சரியானப் பாதையை மீண்டும் தேர்ந்துகொள்ள, புனித வாரம் மிகச் சரியான காலம்"


ஏப்.14,2014. "ஒப்புரவு திருவருள் அடையாளத்தைப் பெற்று, சரியானப் பாதையை மீண்டும் தேர்ந்துகொள்ள, புனித வாரம் மிகச் சரியான காலம்" என்று தன் Twitter பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தவக் காலத்தில் மனந்திரும்புதலின் தேவையையும், ஒப்புரவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புனித வாரத்தின் முதல் Twitter செய்தியிலும் ஒப்புரவு, மற்றும் மனந்திரும்புதல் குறித்தே எடுத்துரைத்துள்ளார்.
மேலும், ஏப்ரல் 14, இத்திங்கள் முதல், ஏப்ரல் 22, வருகிற செவ்வாய்க் கிழமை முடியக் கொண்டாடப்படும் யூதர்களின் பாஸ்கா விழாவை முன்னிட்டு உரோம் நகர் யூத சமுதாயத்துக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகர் தலைமை ரபி Riccardo Di Segni அவர்களுக்கும், உரோம் யூத சமுதாயத்துக்கும் அனுப்பியுள்ள வாழ்த்துத் தந்தியில், வருகிற மே மாதத்தில் தான் மேற்கொள்ளவிருக்கும் புனித பூமித் திருப்பயணத்துக்காகச் செபிக்குமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.