கிறிஸ்துவின் திருப்பாடுகள் தனது வாழ்வை மாற்றியது, புத்தமத இளைஞர் ஒருவர்
ஏப்.12,2014. இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் குறித்த நிகழ்வு மேடையில் காட்டப்பட்டதைப்
பார்த்தபோது தனது வாழ்வு மாறியதாக, இலங்கை புத்தமத இளைஞர் ஒருவர் கூறினார். முப்பது
வயதாகும் Chandrarathna என்ற இளைஞர் தனது மனமாற்றம் பற்றிப் பேசியபோது, கிறிஸ்துவின்
திருப்பாடுகளைப் பார்த்ததால் தனது வாழ்வு மாறியதாகவும், இது தனது வாழ்வை மேம்படுத்தி
அமைதியில் வாழ உதவியதாகவும் கூறினார். இலங்கையின் தெற்கேயுள்ள Beliaththa என்ற கிராமத்தில்
பிறந்த Chandrarathna, தனது 22வது வயது முதல் நாட்டின் வடக்கிலுள்ள Wennappuwa என்ற ஊரில்
வாழ்ந்து வருகிறார். மது அருந்தி, புகைப்பிடித்துக்கொண்டு பல பெண் நண்பர்களைக் கொண்டு
மோசமான வாழ்க்கை வாழ்ந்ததாகவும், ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் தனது நண்பர்களுடன் சென்று
கிறிஸ்துவின் திருப்பாடுகள் குறித்த நிகழ்வைப் பார்த்தபின்னர் தனது வாழ்வு மாறிவிட்டது
எனவும் கூறினார் Chandrarathna. இவர், வருகிற உயிர்ப்பு ஞாயிறு திருவிழிப்பில் திருமுழுக்குப்
பெறவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.