சிரியா இயேசு சபை அகதிப்பணி அமைப்புக்கு Pax Christi அனைத்துலக விருது
ஏப்.11,2013. 2014ம் ஆண்டின் Pax Christi அனைத்துலக விருது, சிரியா நாட்டில் புலந்பெயர்ந்தோர்
மத்தியில் பணிசெய்யும் இயேசு சபை அமைப்புக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில்
2011ம் ஆண்டில் சண்டை தொடங்கியதிலிருந்து, அந்நாட்டின் புலந்பெயர்ந்தோர்க்கு சிரியா
இயேசு சபை அகதிப்பணி அமைப்பு ஆற்றிவரும் சிறப்பான பணிகளை ஊக்குவிக்கும் விதமாக இவ்விருது
வழங்கப்படுவதாக Pax Christi அமைப்பு அறிவித்துள்ளது. கர்தினால் Bernardus Alfrink
அமைதி நிதி நிறுவனத்தால் 1988ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த பாக்ஸ் கிறிஸ்டி அனைத்துலக
அமைதி விருது, உலகின் பல்வேறு பாகங்களில் அமைதி, நீதி மற்றும் அகிம்சாவுக்காக அர்ப்பணித்து
உழைக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. சிரியாவின் தமாஸ்கு,
ஹோம்ஸ், அலெப்போ மற்றும் கடற்கரைப் பகுதிகளில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு
இதுவரை உதவியுள்ளது சிரியா இயேசு சபை அகதிப்பணி அமைப்பு.