2014-04-07 17:22:25

வத்திக்கான் வங்கியின் வருங்கால செயல்பாடுகள் குறித்தப் பரிந்துரைகளுக்கு திருத்தந்தையின் அங்கீகாரம்


ஏப்.07,2014. வத்திக்கான் வங்கி என்று அழைக்கப்பட்டு வந்த, ‘மறைப் பணிகளுக்கென இயங்கும் நிதி நிறுவன’த்தின் வருங்கால செயல்பாடுகள் குறித்தப் பரிந்துரைகளுக்கு, கத்தோலிக்கத் திருஅவை, திருப்பீடம் மற்றும் வத்திக்கான் நகரின் நலனை மனதிற்கொண்டு, அங்கீகாரம் வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
உலக அளவில் திருஅவைக்குச் சிறப்பு நிதி நிர்வாகச் சேவைகளைக் கவனமுடன் செயல்படுத்த உள்ள IOR என்ற இந்த நிதி நிறுவனம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதியும், நவம்பர் 15ம் தேதியும் வெளியிட்டச் சிறப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு, செயல்களை ஆற்றும்.
வெளிப்படையான வகையில் செயல்படும் இந்நிதி நிறுவனத்தின் நிர்வாகச் செயல்பாடுகள் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் கண்காணிப்பின் கீழ் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.