2014-04-07 17:23:59

சிரியாவில் 72 வயதான இயேசு சபை அருள்பணியாளர் சுட்டுக்கொலை


ஏப்ரல் 07,2014. சிரியாவின் Homs நகரில் பணியாற்றிவந்த டச்சு நாட்டு இயேசுசபை அருள்பணியாளர் Francis Van Der Lugt அவர்கள், இத்திங்களன்று காலை துப்பாக்கியால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
Homs இயேசு சபை இல்லத்தில் தங்கியிருந்த 72 வயதான இவரை, முகத்தை துணியால் மறைத்து வந்திருந்த கொலையாளி இருமுறை தலையில் சுட்டுக் கொலைச் செய்துள்ளார்.
மோதலகள் இடம்பெறும் இடங்களில் மக்களைத் தனியாக விட்டுவிட்டு நான் என் உயிரைக் காப்பாற்ற வெளியேறமாட்டேன் எனக்கூறி Homs நகரில் வாழ்ந்துவந்த அமைதியின் மனிதர் Van Der Lugtன் இழப்பு குறித்து கவலையை வெளியிட்ட திருப்பீடப் பேச்சாளர் இயேசுசபை அருள்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், மறைந்த அருள் பணியாளருக்குச் செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.