ஏப்.05,2014. மனித வணிகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இம்மாதம்
9,10 தேதிகளில் வத்திக்கானில் கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது. திருப்பீடத்தின் அறிவியல்
துறையில் நடக்கவுள்ள இக்கருத்தரங்கை, இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் கர்தினால்
வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் தலைமை ஏற்று நடத்துவார். மனித வணிகத்துக்குப் பலியானவர்கள்,
சட்ட வல்லுனர்கள் போன்றோர் பேசவிருக்கும் இக்கருத்தரங்கு, இவ்விவகாரத்தில், காவல்துறைக்கும்,
திருஅவைக்கும் இடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள், இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களையும் சந்திப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.