ஏப்.04,2014. பிலிப்பின்சில் ஹையான் புயலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென Cebuவில்
அமைக்கப்பட்டுவரும் ஒரு புதிய குடியிருப்புக்கு "பிரான்சிஸ் கிராமம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
ERDA என்ற சேவியர் பள்ளி மற்றும் கல்வி ஆய்வு அமைப்புக் குழுவினரால் கட்டப்பட்டுவரும்
45 புதிய வீடுகள் கொண்ட குடியிருப்புக்கு, "பிரான்சிஸ் கிராமம், அதாவது திருத்தந்தை பிரான்சிஸ்
Gawad Kalinga" என்று பெயரிட்ட நிகழ்வை, திருப்பலியுடன் இத்திங்களன்று சிறப்பித்தனர்
பிலிப்பின்ஸ் இயேசு சபை அருள்பணியாளர்கள். முதல் இயேசு சபை திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் பெயரில், 1 இலட்சத்து 50 ஆயிரம் பேசோஸ் செலவில் 45 வீடுகள் கட்டப்பட்டுவருகின்றன.