இலாபம் என்ற கருத்தியலை மட்டும் கொண்டு செயல்படும் வர்த்தகம் பயனற்றது - கர்தினால்
டர்க்சன்
ஏப்.03,2014. வர்த்தகச் சந்தைகளின் வல்லுனர்களாக இருப்பதைக் காட்டிலும், நெறியுள்ள தலைவர்களாக
வாழ்வதற்கு மாணவர்களை உருவாக்கவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அமெரிக்காவின்
டெக்சஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் நகரில் வர்த்தக நெறிகள் குறித்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய
திருப்பீட நீதி, அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வாறு கூறினார். இவ்வுலகைக்
குறித்தும், இவ்வுலகில் நமது பங்கைக் குறித்தும் சரிவரப் புரிந்துகொள்ளாமல் இருக்கும்போது,
நமது நம்பிக்கையும் முழுமை பெறாமல் போக வாய்ப்புண்டு என்று கர்தினால் டர்க்சன் எடுத்துரைத்தார். இருவருக்கிடையே
உருவாகும் உணர்ச்சிகளை மட்டும் கொண்டு திருமண வாழ்வைக் கட்டியெழுப்ப முடியாது என்பதுபோல,
இலாபம் என்ற கருத்தியலை மட்டும் கொண்டு செயல்படும் வர்த்தகம் பயனற்றது என்று கர்தினால்
டர்க்சன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.