2014-03-31 16:18:00

வெப்பம் அதிகரிப்பது தொடர்ந்தால் மனித இனம் அழியும் ஆபத்து உள்ளது


மார்ச்,31,2014. எரிபொருட்களைப் பயன்படுத்துவது தற்போது உள்ளதுபோல் தொடர்ந்தால், விரைவில் மனித இனம் அழியும் ஆபத்து உள்ளது என எச்சரித்துள்ளனர் ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள்.
உலகம் வெப்பமடைவதும், குளிர்வதும் தற்போதுபோல் எக்காலத்திலும் இடம்பெற்றதில்லை என்ற கவலையை வெளியிட்ட ஆஸ்திரேலியாவின் Canberra பல்கலைக்கழக நலத்துறை தலைவர் Helen Berry, இத்தகைய அசாதரண தட்பவெப்பநிலை மாற்றங்கள் மக்கள் நலனையும் சமூக நிலையான தன்மைகளையும் வெகு அளவில் பாதித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இன்றைய உலகில் வெப்பம் அதிகரித்துக்கொண்டுச் செல்வது, கடந்த பல ஆண்டுகளாக பெறப்பட்டுவந்த சமூக மேம்பாட்டுப் பலன்களை பெருமளவில் பாதிக்கும் எனவும், Berryயுடன் பணியாற்றிய மேலும் இரு அறிவியலாளர்கள் இணைந்து அறிவித்துள்ளனர்.

ஆதாரம் : Catholic Online








All the contents on this site are copyrighted ©.