மெல்லிய தோல்களில் எழுதப்பட்ட அரிய விவிலியப் பிரதிகள் விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு...
மார்ச்,29,2014. மெல்லிய தோல்களில் எழுதப்பட்ட ஏறக்குறைய 200 அரிய விவிலியப் பிரதிகள்,
வருகிற ஏப்ரல் 2 முதல் ஜூன் 22ம் தேதி வரை வத்திக்கானில் அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்படவுள்ளன
என அறிவிக்கப்பட்டுள்ளது. "Verbum Domini II: இறைவார்த்தை உலகெங்கும் செல்கிறது"
என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், சாக்கடல் சுருள்களின் 3 துண்டுப்பிரதிகள்,
1611ம் ஆண்டில் அச்சிடப்பட்ட King James Bibleன் மூலப்பிரதி, 1971ம் ஆண்டில் நிலவுக்கு
எடுத்துச்செல்லப்பட்ட microchip விவிலியம் உட்பட அரிய விவிலியப் பிரதிகள் வைக்கப்பட்டிருக்கும்
என அறிவிக்கப்பட்டுள்ளது. கி.பி. 200ம் ஆண்டுவாக்கில் பப்பிரஸ் தாளில் எழுதப்பட்ட
லூக்கா, யோவான் நற்செய்தி நூல்களும் இதில் இடம்பெறும். வத்திக்கானில் இதேபோன்ற அருங்காட்சியகம்
வைக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும். King James Bible வெளியிடப்பட்டதன் 400ம் ஆண்டை
முன்னிட்டு இரு ஆண்டுகளுக்கு முன்னர், வத்திக்கான் பசிலிக்காவுக்கு அருகிலுள்ள கார்லோ
மாஞ்ஞோ அறையில் ஓர் அருங்காட்சியகம் வைக்கப்பட்டது.