நசுக்கப்படும் கிறிஸ்தவருக்காகச் செபிக்குமாறு பாகிஸ்தான் ஆயர் ஒருவர் அழைப்பு
மார்ச்,29,2014. பாகிஸ்தானில் கிறிஸ்தவர் ஒருவர், தெய்வநிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டு
மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து அந்நாட்டு சமயத் தலைவர்களும், தன்னார்வக் குழுக்களும்
தங்களின் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டு முதல் சிறையில் வைக்கப்பட்டிருந்த
Sawan Masih என்ற 26 வயது கிறிஸ்தவருக்கு, லாகூரிலுள்ள ஒரு நீதிமன்றம் இவ்வெள்ளியன்று
மரணதண்டனை தீர்ப்பளித்துள்ளது . இத்தீர்ப்பு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள இஸ்லாமபாத்-ராவல்பிண்டி
ஆயர் Rufin Anthony அவர்கள், பொய்யானக் குற்றச்சாட்டை வைத்து மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பதைக்
காணும்போது கவலையாக இருக்கின்றது என்று கூறியுள்ளார். Sawan Masih, கல்வியறிவற்றவர்
எனவும், இவர் எதற்காகக் குற்றம்சாட்டப்பட்டார் என்பதுகூட அவருக்குத் தெரியாது எனவும்
கூறிய ஆயர் அந்தோணி அவர்கள், Sawan Masih, Asia Bibi ஆகிய இருவருக்காகவும் செபிப்போம்
எனக் கூறியுள்ளார். தெய்வநிந்தனைச் சட்ட்த்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள Sawan
Masih, Asia Bibi ஆகிய இருவரும் நீதிக்காகக் காத்திருக்கின்றனர் என்றும் ஆயர் அந்தோணி
தெரிவித்தார்.