2014-03-28 16:36:16

நம் தவறுகளுக்கு எதிராகப் போராடுவதற்குத் தவக்காலம் நமக்கு உதவுகின்றது, திருத்தந்தை பிரான்சிஸ்


மார்ச்,28,2014. நாம் அனைவரும் நல்ல வாழ்வுக்காக நம்மை மேம்படுத்த வேண்டும், அதற்காக மாற வேண்டும், நம் தவறுகளுக்கு எதிராகப் போராடுவதற்குத் தவக்காலம் நமக்கு உதவுகின்றது என்று, தனது டுவிட்டர் செய்தியில் இவ்வெள்ளியன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இவ்வெள்ளி மாலை 5 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் ஆண்டவரோடு 24 மணி நேரம் என்ற பக்தி முயற்சியை துவக்கி வைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வழிபாட்டில் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர்களுள் ஒருவராக திருத்தந்தையும் இருக்கிறார்.
இவ்வெள்ளி இரவு மற்றும் இச்சனிக்கிழமை முழுவதும் உலகெங்கும் அனைத்து மறைமாவட்டங்களும் இந்தப் பக்தி முயற்சியைக் கடைப்பிடிக்கப்படுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.