2014-03-27 16:53:12

புதிய அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, லெபனான் நாட்டுக்கு மட்டுமே உரியது - கர்தினால் Boutros Rai


மார்ச்,27,2014. லெபனான் நாட்டின் புதிய அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் கடமையும் அந்த நாட்டுக்கு மட்டுமே உரியது என்றும், ஈரான், சவூதி அரேபியா, அமேரிக்கா ஆகிய நாட்டினரின் உரிமை இதுவல்ல என்றும் அந்நாட்டு கர்தினால் ஒருவர் கூறியுள்ளார்.
லெபனான் நாட்டின் தற்போதைய அரசுத் தலைவரின் பதவிக் காலம் மே மாதம் 25ம் தேதி நிறைவடையும் தருணத்தில், அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமையே என்று அந்தியோக்கியாவின் மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் Bechara Boutros Rai அவர்கள், தொலைக்காட்சியில் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
தற்போதைய அரசுத் தலைவர் Michel Sleiman அவர்கள் பதவி இறங்கும்போது, அந்நாட்டின் அமைப்பு முறைப்படி, அரசுத் தலைவர் பதவி ஒரு கிறிஸ்தவருக்கே உரியது என்பதை கர்தினால் Boutros Rai அவர்கள் சுட்டிக்காடியுள்ளார்.
ஈரான், சவூதி அரேபியா, அமேரிக்கா போன்ற நாட்டுகளின் தலையீட்டால், திரைமறைவில் பல ஏற்பாடுகள் நடப்பது லெபனான் நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதையும் கர்தினால் Boutros Rai அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.