இந்தியாவின் பொதுத்தேர்தல்களுக்காக ஏப்ரல் 6ம் தேதி செப நாள் - இந்தியத் திருஅவை அறிவிப்பு
மார்ச்,24,2014. இந்தியாவின் பொதுத்தேர்தல்களில் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு, சிறந்த
வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்க, ஏப்ரல் 6ம் தேதி, ஞாயிற்றுக் கிழமையை, செப நாளென்று ஒதுக்கியுள்ளது
இந்தியத் திருஅவை. பொதுத்தேர்தல், அமைதியான முறையில் இடம்பெறவும், நல்ல தலைவர்கள்
தேர்ந்தெடுக்கப்படவும் இந்திய விசுவாசிகள் அனைவரும் ஏப்ரல் 6ம் தேதியன்று சிறப்பான வகையில்
செபிக்கவேண்டும் என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் பசிலியோஸ் க்ளீமிஸ் அவர்கள்,
ஆயர்கள் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் விண்ணப்பித்துள்ளார். அரசின் மதச்சார்பற்ற
கொள்கையை ஆதரிப்பவர்கள், மதங்களிடையே பேச்சுவார்த்தையை ஊக்குவிப்பவர்கள், சிறுபான்மையினரின்
நலனில் அக்கறை கொண்டோர், ஏழைகளின் உரிமைகளை மேம்படுத்துவோர் ஆகியோரைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கவேண்டும்
என்று கர்தினால் க்ளீமிஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.