அனைத்துலக மகிழ்ச்சி நாளில் வறுமையை ஒழிக்க அனைவருக்கும் அழைப்பு, ஐ.நா.
மார்ச்,21,2014. அனைத்துலக மகிழ்ச்சி நாளில் உலக மக்கள் அனைவரும் வறுமையை ஒழிக்கவும்,
நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது ஐ.நா.நிறுவனம். மார்ச்
20 இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக மகிழ்ச்சி நாளையொட்டி இவ்வேண்டுகோளை முன்வைத்த
ஐ.நா. அதிகாரிகள், கலாச்சாரங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், சமூகத்தில் யாரும் ஒதுக்கப்படாமல்
அனைவரையும் ஒன்றிணைக்கவும் முயற்சிகள் எடுக்கப்படுமாறு கேட்டுள்ளனர். பூட்டான் நாட்டின்
முயற்சியினால் 2012ம் ஆண்டு ஏப்ரலில் ஐ.நா. உயர்மட்டக்குழு அனைத்துலக மகிழ்ச்சி நாளுக்கு
ஒப்புதல் அளித்தது. அதே ஆண்டு ஜூலையில் மார்ச் 20ம் தேதியை அனைத்துலக மகிழ்ச்சி நாளாகச்
சிறப்பிக்கவும் இசைவு தெரிவித்தது ஐ.நா.