மலைப்பாம்புகள் தங்கள் பிறப்பிடத்தைத் தேடி, மீண்டும் சென்றடையும் திறன்
பெற்றவை
மார்ச்,20,2014. மலைப்பாம்புகள் தங்கள் பிறப்பிடத்தைத் தேடி, மீண்டும் சென்றடையும் திறன்
பெற்றவை என்று Royal Society - Bilogy Letters என்ற அறிவியல் இதழ் ஒன்று கூறியுள்ளது. Florida
மாநிலத்தில் Everglades பகுதியில் பிடிக்கப்பட்டு 23 மைல்களுக்கு அப்பால் கொண்டுசெல்லப்பட்ட
மலைப்பாம்புகள், விடுவிக்கப்பட்டதும், அவை தன் பிறப்பிடத்திற்குத் திரும்பியுள்ளன என்பது
உறுதி செய்யப்பட்டுள்ளது. வானொலி அலைக் கருவிகள் பொருத்தப்பட்ட இந்தப் பாம்புகள்,
விரைவாகத் தங்கள் பிறப்பிடத்திற்குத் திரும்பியதைப் பதிவு செய்த அறிவியலாளர்கள், பிறப்பிடம்
திரும்ப பாம்புகள் காட்டிய வேகம் தங்களை வியப்பில் ஆழ்த்தியது என்றும் கூறியுள்ளனர். கடல்
ஆமைகள் தங்கள் பிறப்பிடத்தைக் கண்டுபிடித்து மீண்டும் செல்வது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள
அறிவியல் உண்மை என்று கூறும் ஆய்வாளர்கள், அதேபோல், மலைப்பாம்புகளுக்கும் திசையறியும்
உணர்வுகள் உள்ளன என்று கூறினர். கடல் ஆமைகள் விண்மீன்களின் இடத்தைக் கணித்து தங்கள்
திசையை அறிவதுபோல, மலைப்பாம்புகள், சூரிய ஒளிகொண்டும், பூமியில் உள்ள வேறுபட்ட மணங்களின்
துணைகொண்டும் தங்கள் வழியைக் கண்டுபிடிக்கின்றன என்று அறிவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.