2014-03-18 16:24:54

குவாத்தமாலாவில் 19 வீடற்ற குடும்பங்கள் திருத்தந்தைக்கு நன்றி


மார்ச்,18,2014. “Cor Unum” என்ற திருப்பீட பிறரன்பு நிறுவனத் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா அவர்கள் இச்செவ்வாயன்று குவாத்தமாலா நாட்டுக்குச் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
வருகிற வெள்ளிக்கிழமைவரை கர்தினால் சாரா அவர்கள் மேற்கொள்ளும் இச்சுற்றுப்பயணத்தில், குவாத்தமாலா நாட்டின் Santa Rosa de Lima மறைமாவட்டத்தில் ஓர் ஆலயத்தைத் திருநிலைப்படுத்துவதுடன், 19 புதிய வீடுகளையும் ஆசீர்வதிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாத்தமாலா நாட்டில் 2011ம் ஆண்டில் இடம்பெற்ற இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக, அவரின் உதவியால் ஒரு சிற்றாலயமும், 19 வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
திருத்தந்தையின் இவ்வுதவிக்கு குவாத்தமாலாவின் வீடற்ற குடும்பங்கள் தங்களின் நன்றியையும் தெரிவித்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.