2014-03-17 17:06:52

திருத்தந்தை பிரான்சிஸ், அர்ஜென்டினா அரசுத்தலைவர் சந்திப்பு


மார்ச்,17,2014. அர்ஜென்டினா அரசுத்தலைவர் Cristina Fernández de Kirchner அவர்களை இத்திங்கள்கிழமையன்று திருப்பீடத்தில் இருபது நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீட பத்திரிகை அலுவலகம், திருத்தந்தையின் ஓராண்டு பணி நிறைவையொட்டி வாழ்த்துத் தெரிவிக்க அர்ஜெண்டினா நாட்டு குழுவுடன் அரசுத்தலைவர் வந்ததாகவும், அக்குழுவையும் அரசுத்தலைவரையும் தனித்தனியே சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத்தலைவருடன் மதிய உணவருந்தியதாகவும் தெரிவித்தது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டினா நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.