சிரியாவில் கடத்தி வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரிகள் விடுதலை
மார்ச்,10,2014. கடந்த மூன்று மாதகாலமாக சிரிய புரட்சியாளர்களால் கடத்திவைக்கப்பட்டிருந்த
12 கத்தோலிக்கப் பெண் துறவிகள் இஞ்ஞாயிறன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். Arsal என்ற லெபனன்
நகருக்குக் கொண்டுச் செல்லப்பட்ட இந்த அருட்சகோதரிகள், தற்போது லெபனன் பாதுகாப்பு நிறுவனத்தின்
துணையோடு சிரியா நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். Damascusக்கு வடக்கேயுள்ள Maaloula
என்ற கிறிஸ்தவ நகரை இஸ்லாமியர்கள் தாக்கியபோது கடந்த டிசம்பரில் இந்த கத்தோலிக்க அருட்சகோதரிகள்
காணாமற்போயினர். இந்த அருட்சகோதரிகளின் விடுதலைக்கான முன்நிபந்தனையை ஏற்றுள்ள சிரிய
அரசு, சிரிய சிறைகளிலிருந்து 138 பெண்கைதிகளை விடுவித்துள்ளது என சில செய்தி நிறுவனங்கள்
தெரிவிக்கின்றன.