மார்ச்,10,2014. இஞ்ஞாயிறு முதல் திருப்பீடத்தலைமையக அதிகாரிகளுடன் இணைந்து தான் ஆண்டு
தியானத்தை மேற்கொள்ளப்போவது குறித்து ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் அறிவித்தார் திருத்தந்தை
பிரான்சிஸ். மார்ச் 14, அதாவது இவ்வெள்ளிவரை இடம்பெறும் இந்த ஆண்டு தியானத்தில் கலந்துகொள்ளும்
அனைவருக்காகவும் செபிக்குமாறும் விசுவாசிகளை நோக்கி அழைப்புவிடுத்தார் திருத்தந்தை. உரோம்
நகருக்கு அருகேயுள்ள Ariccia எனுமிடத்தில் House of the Divine Master எனும் இல்லத்தில்
திருத்தந்தையும் திருப்பீட தலைமையக அதிகாரிகளும் பங்குகொள்ளும் ஆண்டு தியானம் இடம்பெறுகிறது. தன்
ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில், அனைத்துலக கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்புத்
துவக்கியுள்ள, பசிக்கு எதிரான முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.