2014-03-10 16:39:48

ஆகஸ்டில் திருத்தந்தையின் கொரியத் திருப்பயணம்


மார்ச்,10,2014. இவ்வாண்டு ஆகஸ்ட் 14 முதல் 18 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொரியக் குடியரசில் மேய்ப்புப்பணி திருப்பயணம் மேற்கொள்வார் என திருப்பீட செய்தித்தொடர்பு அலுவலகம் இத்திங்களன்று அறிவித்தது.
கொரியக் குடியரசின் அரசுத்தலைவர் மற்றும் அந்நாட்டின் ஆயர்கள் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து இத்திருப்பயணம் இடம்பெறுகிறது.
கொரிய மறைமாவட்டம் Daejeonல் ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற உள்ள ஆறாவது ஆசிய இளையோர் தினக் கொண்டாட்டங்களிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்வார் எனவும் திருப்பீடச் செய்தி தொடர்பு அலுவலகம் மேலும் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.