திருத்தந்தையின் புனித பூமித் திருப்பயணம் ஏற்கனவே திட்டமிட்டப்படி இடம்பெறும்
மார்ச்,07,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புனித பூமித் திருப்பயணம் ஏற்கனவே
திட்டமிட்டப்படி இடம்பெறும் என, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ
லொம்பார்தி அறிவித்தார். இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து,
திருத்தந்தையின் திருப்பயணத் தயாரிப்புக்களுக்கு இடையூறுகளை உருவாக்கக்கூடும், எனினும்,
திருத்தந்தையின் புனித பூமித் திருப்பயணம் ஏற்கனவே திட்டமிட்டப்படி இடம்பெறும் என, அருள்பணி
லொம்பார்தி அறிவித்தார். வருகிற மே 24 முதல் 26 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்
முதல் புனித பூமித் திருப்பயணம் இடம்பெறும். அம்மான், பெத்லகேம், எருசலேம் ஆகிய நகரங்களில்
திருப்பயண நிகழ்ச்சிகள் இடம்பெறும். திருத்தந்தையின் திருப்பயணத் தயாரிப்புக்களுக்குப்
பொறுப்பான ஆல்பிரட் கஸ்பாரி தலைமையிலான குழு விரைவில் புனிதபூமி செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.