நோன்பு பற்றிய கேள்வி(மத்.9,14-15) யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, 'நாங்களும் பரிசேயரும்
அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை? ' என்றனர். அதற்கு
இயேசு அவர்களை நோக்கி, ' மணமகன் தங்களோடு இருக்கும் வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட
முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு
இருப்பார்கள்.