2014-03-03 16:27:15

புருண்டி நாட்டிற்கும் திருப்பீடத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்


மார்ச்,03,2014. புருண்டி நாட்டிற்கும் வத்திக்கானுக்கும் இடையே பொது உடன்பாடுகள் குறித்த ஒப்பந்தம் கெயெழுத்திடப்பட்டுள்ளது.
புருண்டியின் சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் Laurent Kavakure, திருப்பீடத்தின் சார்பில் பேராயர் Franco Coppola ஆகியோரிடையே இவ்வொப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி Bujumburaவில் இவ்விரு நாடுகளுக்கும் இடையேக் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமையன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது புருண்டி நாட்டு ஆயர்களும் உடனிருந்தனர் என திருப்பீடத்திலிருந்து வெளியான அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.