எயிட்ஸ் நோயை ஒழிப்பதற்கு கத்தோலிக்கத் திருஅவை, ஐ.நா. ஒன்றிணைந்த முயற்சி
பிப்.28,2014. உலக அளவில் எயிட்ஸ் நோயை ஒழிப்பதற்கு கத்தோலிக்கத் திருஅவை, ஐக்கிய நாடுகள்
நிறுவனம், இன்னும் பிற சமய அமைப்புகள் இணைந்து செயல்படுவதற்குத் திட்டமிட்டுள்ளன. கடந்த
வாரத்தில் உரோமையில் நடந்த இரண்டு நாள் கூட்டத்தில் ஐ.நா. எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையமும்,
பிற நிறுவனங்களும் இவ்வாறு திட்டமிட்டுள்ளன. சில நாடுகளில் இயங்கும் எயிட்ஸ் நோயாளிகள்
பராமரிப்பு மையங்களில் 50 விழுக்காடுவரை கத்தோலிக்கத் திருஅவை நடத்துகின்றது என்று இக்கூட்டத்தில்
அறிவிக்கப்பட்டது. இது குறித்து வத்திக்கான் வானொலியில் பேசிய, அனைத்துலக காரித்தாஸ்
நிறுவனப் பொதுச்செயலர் Michael Roy அவர்கள், எயிட்ஸ் ஒழிப்பு நடவடிக்கையில் இன்னும் அதிகத்
தூரம் செய்ய வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.