எயிட்ஸ் நோயாளிகள் எதிர்நோக்கும் பாகுபாடுகள் களையப்பட வேண்டும், ஐ.நா.
பிப்.28,2014. உலகில் எயிட்ஸ் நோயாளிகள் எதிர்நோக்கும் பாகுபாடுகள் களையப்பட்டு அவர்களிடம்
அனைவரும் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுள்ளார் ஐ.நா. எயிட்ஸ் கட்டுப்பாட்டு
மைய இயக்குனர் Michel Sidibé. மார்ச் முதல் தேதியன்று, பாகுபாடற்ற உலக நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி
நடந்த நிகழ்வு ஒன்றில் இவ்வாறு கேட்டுக்கொண்டார் Sidibé. பிறரைப் பாகுபாட்டுடன் நடத்துபவர்கள்
பிறரின் உலகத்தையும், தங்களது உலகத்தையும் குறுகியதாக அமைக்கின்றனர் என்றுரைத்த Sidibé,
ஒவ்வொரு மனிதரும் மாண்புடன் வாழக்கூடிய உலகம் உருவாகும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.
மனிதர் எந்நிலையில் இருந்தாலும், ஒவ்வொருவரும் முழுமனித மாண்புடன் வாழ்வதற்கு அவர்களுக்கு
இருக்கும் உரிமையை வலியுறுத்தி அதனை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பாகுபாடற்ற உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.