உலக அளவில் ஆண்டுதோறும் பத்து இலட்சம் குழந்தைகள் பிறந்தவுடன் இறப்பு
பிப்.25,2014. குழந்தைகளின் முதல் 24 மணிநேர வாழ்வு மிகவும் ஆபத்தானதாக இருக்கும்வேளை,
உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் தாங்கள் பிறந்த
முதல் நாளிலேயே இறக்கின்றனர் என, குழந்தைகள் நலவாழ்வு தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிறந்தவுடன் இடம்பெறும் இறப்புகளைத் தவிர்த்தல் என்ற தலைப்பில் இத்திங்களன்று அறிக்கை
வெளியிட்டுள்ள Save the Children என்ற குழந்தைகள் நலவாழ்வு நிறுவனம், தாய்க்கும் குழந்தைக்கும்
இலவச நலவாழ்வு வசதிகள் வழங்கப்பட்டு, திறமையான மருத்துவத் தாதிகள் இருந்தால் இந்த இறப்புகளில்
பாதியைத் தடுக்க முடியும் எனக் கூறியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 12 இலட்சம் குழந்தைகள்
பிறக்கும்வேளை, பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களும், தாயின் நோய்களும், குறைப்பிரசவமும்
குழந்தைகள் பிறந்தவுடன் இறப்பதற்கு முக்கிய காரணங்களாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆண்டுதோறும் ஏறக்குறைய 4 கோடிப் பெண்கள், சரியான பயிற்சி பெற்றவர்களின் உதவி இல்லாமல்
குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நிலமையை மாற்ற வேண்டுமென அரசுகளைக் கோரியுள்ளது Save the
Children நிறுவனம். இந்த நிலமையுள்ள மோசமான நாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த நிறுவனம்,
300 மருத்துவத் தாதிகளே உள்ளனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.