இதயத்தின் மொழியைப் பேசுவேன், திருத்தந்தை பிரான்சிஸ்
பிப்.22,2014. மிகவும் எளிமையான மற்றும் அதிக உண்மையானதுமாகிய இதயத்தின் மொழியைப் பேசுவேன்,
இந்த மொழிக்கு இரு விதிகள் கொண்ட சிறப்பு இலக்கணம் இருக்கின்றது என்று கூறியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். அமெரிக்க ஐக்கிய நாட்டின் Texas மாநிலத்தில் நடந்த பெந்தகோஸ்து கருத்தரங்குக்கு
அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், எல்லாவற்றுக்கும் மேலாக
கடவுளை அன்பு கூர்வதும், பிறரை அன்பு கூர்வதுமே அந்த இரு விதிகள் என்றும் கூறியுள்ளார். நாம்
ஒருவர் ஒருவரை, சகோதரர்களாகச் சந்திக்க வேண்டும் என்றும், நான் உங்கள் சகோதரர் என்ற முறையில்
உங்களிடம் பேசுகிறேன் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்த நம் ஆசைகள் வளர அனுமதிப்போம்,
எனக்காகச் செபியுங்கள் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.