2014-02-21 15:53:59

நாம் அடுத்தவரைச் சார்ந்து வாழ்வது, பிறர்மீது கருணைகாட்டத் தூண்ட வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்


பிப்.21,2014. ஒவ்வொரு மனிதரும் எப்போதும் அடுத்தவரைச் சார்ந்து வாழ்கின்றனர் என்ற உண்மைநிலை, ஒவ்வொருவரும் அடுத்தவரை ஒதுக்கிவிடாமலும், அடுத்தவர்மீது கருணையுடனும் வாழத் தூண்டுகின்றது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானில் திருப்பீட வாழ்வு அவை நடத்திய இரண்டு நாள் கூட்டத்துக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதர் மத்தியிலான உறவுகள் ஒருவர் ஒருவரை எப்போதும் சார்ந்துள்ளன என்பதை நாம் எளிதில் மறந்துவிடுகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மனிதரும் அவரவர் இருக்கும் நிலையில் அவரவருக்குத் தேவைப்படும் உதவிகளை மற்றவர்கள் செய்யுமாறு கேட்டுள்ள திருத்தந்தை, வயதுமுதிர்தல், உடல்உறுப்புக் குறைபாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மனிதரின் மாண்பு மதிக்கப்பட வேண்டுமென்று வலிறுத்தியுள்ளார்.
வயதுமுதிர்தல் மற்றும் உடல்உறுப்புக் குறைபாடு என்ற தலைப்பில் திருப்பீட வாழ்வு அவை நடத்திய இரண்டு நாள் கூட்டம் இவ்வெள்ளியன்று நிறைவடைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.