பிப்.18,2014. செபிப்பதற்கும், மன்னிப்பதற்கும், அமைதியை விதைப்பதற்கும், தேவையில் இருப்போரின்
அருகில் இருப்பதற்கும் கிறிஸ்துவிடமிருந்து கற்றுக்கொள்வோம் என இச்செவ்வாயன்று தன் டுவிட்டர்
பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் தனது தாயகமான அர்ஜென்டினா நாட்டு கடவுச்சீட்டையும், அடையாள அட்டையையும் புதுப்பித்துள்ளார். இது
குறித்துப் பேசிய அர்ஜென்டினா நாட்டு உள்துறை அமைச்சகம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
பயணங்கள் மேற்கொள்ளும்போது திருப்பீடத் தூதரக கடவுச்சீட்டைப் பயன்படுத்தாமல் அர்ஜென்டினா
நாட்டுக் கடவுச்சீட்டையேப் பயன்படுத்துவார் என்று கூறியுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் தற்போதைய வெள்ளை ஆடையுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் அக்கடவுட்சீட்டில் உள்ளது.
2014ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி வழங்கப்பட்டுள்ள இதன் காலவரையறை 2024ம் ஆண்டில் நிறைவடையும்
என்றும் அர்ஜென்டினா நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்தது.