2014-02-17 16:05:06

இலங்கையில் புற்றுநோயால் கடந்த ஆண்டில் 14,000 பேர் உயிரிழப்பு


பிப்.17,2014. இலங்கையில் புற்றுநோய்கள் காரணமாக 14,000 பேர் 2013ம் ஆண்டில் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு நல அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் புற்றுநோய்களால் உயிரிழந்தவர்களில் 2,500 பேர் வாய்ப்புற்று நோயால் மரணமடைந்திருப்பதாகவும் இலங்கை நல அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு 25,842 பேர் இந்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ளனர் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் வாய்ப் புற்றுநோய், தொண்டைக் குழி புற்றுநோய், மார்பு புற்றுநோய், கருப்பை புற்றுநோய், இரைப்பை புற்றுநோய் என்ற புற்றுநோய்களாலேயே மக்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது.
இவற்றில் மூன்று வகையான புற்றுநோய்களுக்கு வெற்றிலை மெல்லுதல், மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் ஆகிய பழக்கங்கள் முக்கிய பங்காற்றுகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : நெருப்பு








All the contents on this site are copyrighted ©.