பிப்.11,2014. 'நோயாளிகள் மற்றும் துன்புறுவோர் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்களைத்
தெரிவிக்கிறேன். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து உங்களோடு இருக்கிறார், அவரை விடாது பற்றிக்கொள்ளுங்கள்'.
என இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். பிப்ரவரி
11, இச்செவ்வாய்க்கிழமையன்று லூர்து அன்னை திருவிழாவோடு இணைந்து கத்தோலிக்க திருஅவையில்
'உலக நோயாளர் தினம்' சிறப்பிக்கப்பட்டதையொட்டி இந்த டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன்
பதவி விலகலை அறிவித்ததன் ஓராண்டு இச்செவ்வாய்க்கிழமை நிறைவுற்றதையொட்டி பிறிதொரு டுவிட்டரையும்
வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'தாழ்ச்சியும் மனவுறுதியும் கொண்ட திருத்தந்தை16ம்
பெனடிக்ட் அவர்களுக்காக என்னோடு இணைந்து செபிக்குமாறு உங்களனைவருக்கும் இன்று அழைப்பு
விடுக்கிறேன்' என அச்செய்தியில் கூறியுள்ளார்.