பிப்.10,2014. 'தாராள மனதுடனும் வெளியில் அதிகம் அறியப்பாடாதவகையில் தியாகங்களுடனும்
தங்கள் மக்களுக்காக தங்களையே அர்ப்பணித்து வாழும் நல்ல மற்றும் நம்பிக்கையுடைய அனைத்துக்
குருக்களுக்காக அனைவரும் செபிப்போம்' என தன் திங்கள் டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். ஒவ்வொரு நாளும் 9 மொழிகளில் ஒருவரி கருத்துக்களை தன் டுவிட்டர் பக்கத்தில்
வெளியிட்டு வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.