2014-02-07 15:30:20

திருத்தந்தை : இறையன்பால் நிரப்பப்படும் வாழ்வில் சுவை மிகுந்திருக்கும்


பிப்.07,2014. நம் வாழ்வு இறையன்பால் நிரப்பப்படுவதற்கு நாம் அனுமதித்தால், அந்த வாழ்வில் நாம் எவ்வளவு சுவையைப் பெறுவோம் என்று இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள Twitter செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருமணம் நிச்சயிக்கப்பட்ட 17 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை, புனித வலண்டீன் விழாவான பிப்ரவரி 14, வருகிற வெள்ளிக்கிழமையன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் சந்திக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 14ம் தேதி காலை 12 மணிக்கு இவர்களைச் சந்தித்து உரையாற்றுவார் என்றும், திருத்தந்தையைச் சந்திப்பதற்கு முன்தயாரிப்பாக இவர்கள் அனைவரும் ஒரு மணிநேரம் செபம் மற்றும் தியானச் சிந்தனைகளில் ஈடுபட்டிருப்பார்கள் என்றும் திருப்பீட குடும்ப அவை அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.