2014-02-06 16:16:10

மருந்துகள் திரட்டும் நாளுக்கு பேராயர் Zygmunt Zimowski வெளியிட்டுள்ள செய்தி


பிப்.06,2014. மக்களுக்கு, குறிப்பாக, வறியோருக்குத் தேவையான அடிப்படை மருந்துகளைத் திரட்டவும், அவற்றை அவர்களுக்கு வழங்கவும் நாம் கடமைப் பட்டுள்ளோம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பிப்ரவரி 11, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளன்று சிறப்பிக்கப்படும் நோயுற்றோருக்கான உலக நாளையொட்டி, பிப்ரவரி 8, இச்சனிக்கிழமை மருந்துகள் திரட்டும் நாளென கத்தோலிக்கத் திருஅவை சிறப்பிக்கிறது.
கடந்த 14 ஆண்டுகளாகச் சிறப்பிக்கப்பட்டுவரும் இந்நாளையொட்டி, நலப்பணியாளர் திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Zygmunt Zimowski அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள செய்தியில், தேவையானாவர்களுக்கு மருந்துகள் வழங்கும்படி விண்ணப்பித்துள்ளார்.
தேவையான உடல் நலக் கண்காணிப்பும், தேவையான மருந்துகளும் உரிய நேரத்தில் வறியோரைச் சென்றடைவது பல உயிர்களைக் காக்கும் என்று பேராயர் Zimowski அவர்கள், தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.