புத்துயிர் பெற்ற மதுரை இயேசு சபை மறைப்பணித்தளத்தின் வயது 175
பிப்.06,2014. அ.பணி ஆரோக்கியசாமி சேவியர் சே.ச, திருச்சி புனித வளனார் தன்னாட்சிக் கல்லூரியின்
வரலாற்றியல் துறையின் தலைவர். உலக அளவில் இயேசு சபையினரின் பணிகள் தடை செய்யப்பட்டு மீண்டும்
புத்துயிர் பெற்றபோது மதுரை இயேசு சபை மறைப்பணித்தளமும் மீண்டும் எழுச்சி பெற்றது. அதன்
175ம் ஆண்டு நிறைவு கடந்த வார இறுதியில் திருச்சியில் சிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வு
குறித்து தொலைபேசி வழியாகப் பேசுகிறார் அ.பணி ஆரோக்கியசாமி சேவியர்.