பிப்.03,2014. Samoa அரசுத்தலைவர் Tui Atua Tupua Tamasese Efi அவர்கள், இத்திங்கள்
காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார். இச்சந்திப்புக்குப்
பின்னர் திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கிடையேயான உறவுகளின்
செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் Samoa அரசுத்தலைவர். சமூக
வாழ்வு, நாட்டின் பொருளாதாரம், கத்தோலிக்க திருஅவை அந்நாட்டில் பல்வேறு துறைகளின் வழியாக
ஆற்றிவரும் பணிகள், குறிப்பாக மனிதகுல மேம்பாட்டுக்குத் திருஅவை செய்துவரும் பணிகள் போன்றவை
குறித்து இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்புடையவைகளில்
அனைத்துலக அளவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது கருத்துக்கள்
பரிமாறப்பட்டன.