ஜொவாய் மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக முன்னாள் பேராயர் நியமனம்
பிப்.03,2014. கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆயரின்றி இருக்கும் இந்தியாவின் ஜொவாய் மறைமாவட்டத்தின்
அப்போஸ்தலிக்க நிர்வாகியாக குவகாத்தியின் ஓய்வுப்பெற்ற பேராயர் தாமஸ் மேனாம்பரம்பில்
அவர்களை இத்திங்களன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 2006ம் ஆண்டு ஷில்லாங்
உயர் மறைமாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதியைக்கொண்டு உருவாக்கப்பட்ட ஜொவாய்
மறைமாவட்டத்தின் முதல் ஆயர் வின்சென்ட் கிம்பட், 2011ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி மரணமடைந்ததிலிருந்து
இம்மறைமாவட்டம் ஆயரின்றி இருந்துவந்துள்ளது. தற்போது, அதன் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக,
2012ம் ஆண்டு ஜனவரி மாதம் குவகாத்தி உயர்மறைமாவட்ட நிர்வாகப்பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற
பேராயர் மேனாம்பரம்பில் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.