பாப்புவா நியு கினியில் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பது குறித்து பேராயர் Young கவலை
பிப்.01,2014. பாப்புவா நியு கினி நாட்டில் 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பது
குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ள அதேவேளை, மரண தண்டனைக்கு எதிரான தனது கடும்
எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளார் அந்நாட்டின் Mount Hagen பேராயர் Douglas Young. பாப்புவா
நியு கினியில் 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதற்கு மனித உரிமை குழுக்கள்
கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதையும் தவிர்த்து அந்நாட்டு அரசு அத்தண்டனையை நிறைவேற்றவுள்ளது.
இவ்வாண்டில் 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ள நீதித்துறை
அமைச்சர் Kerenga Kua, இத்தண்டனையை நிறைவேற்றும் முறை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகக்
கூறியுள்ளார். இதற்கிடையே, பாப்புவா நியு கினி அரசு இந்நடவடிக்கையை இரத்து செய்யுமாறு
அந்நாட்டு ஆயர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.