2014-02-01 14:50:42

Faiasalabad மறைமாவட்டம் :2014ம் ஆண்டு, அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டு


பிப்.01,2014. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள Faiasalabad மறைமாவட்டம், 2014ம் ஆண்டை அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டாக அறிவித்துள்ளது.
2014ம் ஆண்டை அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டாக அறிவித்துள்ள Faiasalabad மறைமாவட்டத்தின் புதிய ஆயர் Joseph Arshad மக்களில் நம்பிக்கையும், அமைதியும் ஏற்படுவதற்கு முயற்சித்து வருகிறார் என்று பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.
மேலும், பங்குகள், கல்வி நிறுவனங்கள், திருஅவை சமூகங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் மேய்ப்புப்பணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் ஆயர் Arshad, நம்பிக்கை, அமைதி, ஒப்புரவு, உரையாடல் ஆகியவற்றை மையப்படுத்தி தனது கருத்துக்களைச் சொல்லி வருகிறார் என்றும் பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.