திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பின்ஸ் நாட்டிற்கு வருகை தருவார் - கர்தினால்
Sarah
சன.29,2014. குறிப்பிட்டத் தேதி ஒன்று வெளியிடப்படவில்லை எனினும், திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் பிலிப்பின்ஸ் நாட்டிற்கு வருகை தருவார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர்
கூறினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி, Haiyan என்ற பெயர் தாங்கிய கடுமையான
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பிலிப்பின்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியை, Cor Unum எனப்படும்
திருத்தந்தையின் பிறரன்புப் பணி அவையின் தலைவர் கர்தினால் Robert Sarah அவர்கள், கடந்த
சனிக்கிழமை முதல், இப்புதன் வரை பார்வையிடச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு
இச்செவ்வாயன்று திருப்பலி நிகழ்த்திய கர்தினால் Sarah அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், அம்மக்களை எப்போதும் தன் மனதில் தாங்கி வருகிறார் என்றும், விரைவில் அவர்களைச்
சந்திக்க வருவார் என்றும் தெரிவித்ததும், கூடியிருந்தோர் மிகுந்த மகிழ்வுடன் ஆரவாரம்
செய்தனர். Haiyan சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, Cor Unum அமைப்பின் வழியாக,
திருத்தந்தை அவர்கள், 1,50,000 டாலர்கள், அதாவது, ஒரு கோடி ரூபாய் உடனடியாக அளித்தார்
என்பதும், தற்போது, அப்பகுதியில் நடைபெறும் பல்வேறு துயர் துடைப்புப் பணிகளில் Cor Unum
அமைப்பு ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.