2014-01-25 15:55:32

சுற்றுச்சூழல் குறித்த திருத்தந்தையின் ஏடு


சன.25,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுற்றுச்சூழலை மையமாக வைத்து எழுதத் தொடங்கியுள்ளார் எனவும், இது அப்போஸ்தலிக்கத் திருமடலாக மாறக்கூடும் எனவும் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி அறிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மனிதச் சுற்றுச்சூழல் குறித்து அதிக அழுத்தம் கொடுக்க எண்ணியுள்ளார் எனவும், முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் மனிதச் சுற்றுச்சூழலை எவ்வாறு விவரித்தார் எனவும் இவ்வெள்ளியன்று பத்திரிகையாளரிடம் விளக்கினார் அருள்பணியாளர் லொம்பார்தி.
மனிதச் சுற்றுச்சூழல் என்பது மனிதர் இயற்கையைப் பாதுகாத்து மதிப்பதோடு, ஆணும் பெண்ணும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்ற மனித இயல்பை மதித்து நடக்க வேண்டும் என, திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார் எனவும் திருப்பீடப் பேச்சாளர் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.