பிப்ரவரி 5-12, கேரளாவில் இந்திய ஆயர்கள் பேரவையின் கூட்டம்
சன.24,2014. ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்திய ஆயர்கள் பேரவையின் கூட்டம் வருகிற
பிப்ரவரி 5 முதல் 12 வரை கேரளாவின் பாலாய் நகரில் இடம்பெறவுள்ளது. ஏறக்குறைய 235 ஆயர்கள்
கலந்துகொள்ளவிருக்கும் இக்கூட்டத்தில், நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களில்
திருஅவையின் அரசியல் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக,
பாலாய் ஆயர் Joseph Kallarangatt தெரிவித்துள்ளார். இது தவிர, மேற்குத்தொடர்ச்சி மலை
குறித்த கஸ்தூரிரங்கன் அறிக்கை மற்றும் பிற சமூக, அரசியல் விவகாரங்கள் இக்கூட்டத்தில்
கலந்துபேசப்படும் எனவும் ஆயர் Kallarangatt கூறினார். மேலும், இந்தியாவில் 2013ம்
ஆண்டில் நான்காயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் நடத்தப்பட்டதாக,
கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் அறிக்கை கூறுகிறது.