திருத்தந்தை : ஒவ்வொரு நாளும் நமது திருமுழுக்கை வாழ அழைக்கப்பட்டுள்ளோம்
சன.24,2014. புதிய படைப்புக்களாக, கிறிஸ்துவை அணிந்துகொண்டு, ஒவ்வொரு நாளும் நமது திருமுழுக்கை
வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று இவ்வெள்ளியன்று Twitter செய்தியில் கூறியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவு நாளாகிய இச்சனிக்கிழமை
மாலை 5.30 மணிக்கு, உரோம் புனித பவுல் பசிலிக்காவில் மாலைத் திருப்புகழ்மாலைச் செபிப்பார்
திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருவழிபாட்டில், Bosse கிறிஸ்தவ ஒன்றிப்பு நிறுவனத்தின்
மாணவர்கள் கலந்து கொள்வார்கள். ஆண்டுதோறும் சனவரி 18 முதல், பனித பவுல் மனந்திரும்பிய
விழாவான சனவரி 25 வரை கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் சிறப்பிக்கப்படுகின்றது.