2014-01-24 15:32:27

இலங்கையில் 12,000 சீனா மற்றும் இந்தியப் பணியாளர்கள்


சன.24,2014. இலங்கையில் ஏறத்தாழ 12,000 சீன மற்றும் இந்தியப் பணியாளர்கள் தொழில் செய்யும் அனுமதியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு 6,600 சீனர்களும், 6,297 இந்தியர்களும் இலங்கையில் பணியாற்றினர். இந்தப் பணியாளர்கள், தொழில்நுட்ப மற்றும் ஏனையத் துறைகளில் ஒத்துழைப்பை வழங்கி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
முதலீடுகள் அதிகரிக்கும்போது அந்தந்த நாடுகளின் பணியாளர்களும் இலங்கையில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது எனவும், அதன் அடிப்படையிலேயே பெருமளவான சீன மற்றும் இந்தியப் பணியாளர்கள் இலங்கையில் இருப்பதாகவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில், இந்திய அரசினால் 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 32 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்றும் அமைச்சர் டி சில்வா தெரிவித்தார்.

ஆதாரம் : தமிழ்வின்







All the contents on this site are copyrighted ©.