தென் கொரியாவுக்குத் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்வதற்குத் தலத்திருஅவையோடு அரசு
ஒத்துழைக்கும், பிரதமர்
சன.21,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரியத் தீபகற்பத்திற்குத் திருப்பயணம்
மேற்கொள்வதற்குத் தலத்திருஅவையோடு சேர்ந்து அந்நாட்டு அரசும் தேவையான அனைத்து முயற்சிகளையும்
எடுக்கும் என தென் கொரிய பிரதமர் Hong Chung –won கூறியுள்ளார். புதிய கர்தினாலாக
அறிவிக்கப்பட்டிருக்கும் செயோல் பேராயர் Andrew Yeom Soo- jung அவர்களை வாழ்த்துவதற்காக
பிரதமர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் இவ்வாறு அறிவித்தார் பிரதமர் Hong
Chung –won. 2014ம் ஆண்டில் தென்கொரியாவில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன
எனவும், இவ்வாண்டு ஆகஸ்டில் தென் கொரியாவின் Daejeon மறைமாவட்டத்தில் ஆசிய இளையோர் மாநாடும்,
124 தென் கொரிய மறைசாட்சிகளை முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தும் நிகழ்வும் நடைபெறும்
எனச் சொல்லப்பட்டுள்ளது.