சன.20,2014. நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்வது மட்டும் போதாது. நாம் விசுவாசத்தை
வாழவேண்டும், அதுவும் வார்த்தைகளால் மட்டுமல்ல, செயல்களாலும் அது வாழ்ந்துகாட்டப்படவேண்டும்
என, தன் டுவிட்டர் பக்கத்தில், இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒன்பது
மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இச்செய்தி வழியாக, வார்த்தை வெளிப்பாடுகளால் மட்டுமன்றி
வாழ்வு வெளிப்பாடுகளாலும் விசுவாசம் அறிவிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ்.