இந்தியாவில் முதன்முறையாக, தேசிய கிறிஸ்தவ பெண்கள் இயக்கம்
சன.18,2014. இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கப் போதனைகளின் அடிப்படையில் இந்திய பெண்
துறவிகள் அமைப்பு, தேசிய கிறிஸ்தவ பெண்கள் இயக்கம் என்ற ஓர் அமைப்பை முதன்முறையாக உருவாக்கியுள்ளது. இரண்டாம்
வத்திக்கான் பொதுச் சங்கமும், பெண்கள் மீதான அதன் தாக்கமும் என்ற தலைப்பில் பெங்களூருவில்
நடந்த நான்கு நாள் கருத்தரங்கின் இறுதியில் தேசிய கிறிஸ்தவ பெண்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில்
தேசிய அளவில் கிறிஸ்தவ பெண்கள், ஏழைகள், மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்கள் சார்பாக இவ்வியக்கம்
செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.